கொள்ளையிட்ட பணத்தில் நண்பர்களுக்கு விருந்து வைத்த தம்பதி கைது..!!
Read Time:1 Minute, 8 Second
விகாரை ஒன்றில் பிக்குமார் தங்கும் வீட்டில் இருந்து 11 லட்சம் ரூபாவை திருடி நண்பர்களுக்கு விருந்து வைத்த சம்பவம் ஒன்று பாணந்துறை பிரதேசத்தில் நடந்துள்ளது.
பாணந்துறை கல்வெட்டிமோர விகாரையில் உள்ள பிக்குகளின் வீட்டிலேயே மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாணந்துறை நகர சபையின் சிற்றூழியர் ஒருவரும் அவரது மனைவியும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளையிட்ட பணத்தில் தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்து, அடகுவைத்த நகைகளை மீட்டுள்ளதுடன் பணத்தை வாரி இறைத்து நண்பர்களுக்கு விருந்தும் வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Average Rating