சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் தப்பினர்…!!
புத்தளம் மாவட்டதில் உள்ள சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற மூன்று சிறுமிகள், நேற்று பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளிப் பிரதேசத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை இல்லத்தில், மதம் மாறக் கோரியும் மற்றும் கொடுமைப்படுத்துவதாக தெரிவித்தும் குறித்த மூன்று சிறுமிகளும், குறித்த நன்னடத்தை இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வெளியேறிய சிறுமிகள் மதுரங்குளியில் அமைந்துள் பொலிஸ் காவலரணில் தஞ்சமடைந்துள்ளனர். இதன்பின்னர், மூன்று சிறுமிகளும் முந்தல் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடாந்து, பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து மூன்று சிறுவர்களையும் முந்தல் பொலிஸார், புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்திய போது அவர்களை சிறுவர் நன்நடத்தை இல்லத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்ற நீதிவான் டீ.சீ.ஹேவீந்த பெரேரா உத்தரவிட்டார்
.
இதில் ஒரு சிறுமி மீண்டும் மதுரங்குளியில் உள்ள சிறுவர் இல்லத்திற்கு செல்ல சம்மதம் தெரிவித்தையடுத்து அச்சிறுமி அந்த இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
ஏனைய இரு சிறுமிகளில் ஒரு சிறுமியை கட்டுப்பொத்த சிறுவர் இல்லத்திலும், மற்றைய சிறுமியை சிலாபம் சிறுவர் இல்லத்திலும் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Average Rating