குடும்ப தகராறு! இரத்தினபுரியில் தாயும் மகளும் படுகொலை..!!
Read Time:56 Second
இரத்தினபுரி மாவட்டத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தின் வேவல்வத்த குருபேவிலா என்னும் இடத்தில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
37 வயதான தாயும், 13 வயதான மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். லட்சுமணன் சசிகலா மற்றும் சுவேந்திரன் சஞ்சீவனி ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
நீண்ட கால முரண்பாடு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவர் அல்லாத ஒருவரே இந்த கொலைகளை செய்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating