இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட 10 வயது சிறுவன்..!!
Read Time:1 Minute, 18 Second
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த தரம் 5இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை இனந்தெரியாத குழுவினர் நேற்று கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவன் பகுதி நேர வகுப்பு முடிந்து, வீடு திரும்பிய போதே முச்சச்சரவண்டியில் வந்த நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நுவரெலியா-ஹட்டன் பிரதான வீதியில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் பாதிக்கப்பட்ட சிறுவனை இனங்கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து தலவாக்கலை புகையிரத நிலைய அதிகாரிகள் குறித்த சிறுவனை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.
குறித்த சிறுவன் டிக்கோயா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating