பூரண நலத்துடன் இருக்கிறேன் -காஸ்ட்ரோ அறிவிப்பு
Read Time:1 Minute, 9 Second
ஆபரேஷனுக்கு பிறகு நான் பூரண நலத்துடன் இருக்கிறேன் என்று கிïபா அதிபர் பீடல் காஸ்ட்ரோ அறிவித்தார். 47 ஆண்டுகளாக அதிபராக இருந்த காஸ்ட்ரோ ஆட்சி அதிகாரத்தை தற்காலிகமாக தன் தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார். குடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அவருக்கு ஆபரேஷன் நடந்தது. அதைத்தொடர்ந்து சில வாரங்களுக்கு அவர் ஓய்வாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதால் அவர் ஆட்சி அதிகாரத்தை தம்பியிடம் ஒப்படைத்தார்.
நேற்று அரசாங்க டி.வி. அறிவிப்பாளர் காஸ்ட்ரோ கூறியதாக தெரிவித்ததாவது:- ஆபரேஷனுக்கு பிறகு நான் பூரண நலத்துடன் இருக்கிறேன். நான் ஆட்சியில் இல்லாத இந்த நேரத்தில் எல்லாமே நன்றாக நடக்கிறது. தொடர்ந்து நடக்கும் என்று காஸ்ட்ரோ கூறினார்.