பல்லடம் அருகே பாறைக்குழியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் சிவக்குமார் (வயது 9). 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் மயில்சாமி (12)., 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சிவக்குமாரும், மயில்சாமியும் தங்களது நண்பர்களுடன் அப்பகுதியில் கல்குவாரி பாறைக்குழிக்கு குளிக்க சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சிவக்குமாரும், மயில்சாமியும் தண்ணீரில் மூழ்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது நண்பர்கள், கூச்சல் போட்டனர்.
பின்னர் இதுகுறித்து ஊர்மக்களுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். உடனே பொதுமக்கள் விரைந்து வந்து பாறைக்குழியில் மூழ்கிய 2 சிறுவர்களையும் பிணமாக மீட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பல்லடம் போலீசார் விரைந்து வந்து 2 சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாறைக்குழியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating