புகையிரதத்தின் முன் பாய்ந்து தாய் தற்கொலை – மகள் படுகாயம்…!!
Read Time:1 Minute, 3 Second
ஹப்புத்ளை புகையிர நிலையத்தில் பெண் ஒருவர் தனது 10 வயது மகளுடன் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தின் முன் பாய்ந்தே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த 10 வயது சிறுமி தற்போது தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
குறித்த, சம்பவம் தொடர்பில் ஹப்புதளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating