பாரிய வாகன விபத்து – நால்வர் படுகாயம்..!!
Read Time:1 Minute, 22 Second
யாழ். பிரதான வீதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் நால்வர் படுகாமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வாகனம் ஒன்று யாழ்.பிரதான வீதியின் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, வாகனத்தில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த வாகனத்தின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது.
படுகாயமடைந்த 4 பேரும் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Average Rating