தாயும் மகளும் ஒரே நேரத்தில் பாலியல் துஷ்பிரயோகம்..!! (வீடியோ)
சிற்றூந்தை வழிமறைத்து கொள்ளையர்கள் ;14 வயது சிறுமியையும் அவரது தாயையும் பாலியல் துஷ்பிரயோகம்செய்துள்ளனர் .
இந்திய – டெல்லியில் ;இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.நொய்டாவில் இருந்து ஒரு குடும்பம் உத்தரபிரதேசம் ஷாஜகான்பூருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிற்றூந்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.அப்போது சிற்றூந்தின் கண்ணாடியில் ஏதோ அழுகிய பொருள் விழுந்துள்ளது .
இதனால் சிற்றூந்தை இரவில் இயக்க சிரமமாக இருந்ததால் காரை நிறுத்தியுள்ளனர்.அவ்வேளையில், ;கொள்ளையர்கள் அவர்களை சுற்றி வளைத்தது, அவர்கள் அணிந்திருந்த நகைகள் அவர்களிடம் இருந்த கைபேசி பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.மேலும் சிற்றூந்தில் இருந்த 14 வயது சிறுமி மற்றும் அவரது தாயாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் .
சிற்றூந்தில் பயணம் செய்த ஆண்களை தாக்கி அவர்களை கயிற்றில் கட்டியுள்ளனர்.சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில்;முறைப்பாடு செய்துள்ளனர்.இது குறித்த விசாரணையை காவற்துறை முன்னெடுத்துள்ளது.
Average Rating