பெற்றோரை பழிவாங்க மாணவியை கழுத்தை நெரித்து கொன்றேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்..!!

Read Time:4 Minute, 1 Second

201608011136558914_Girl-murdered-for-revenge-to-parents-Young-men-confessions_SECVPFவிழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொண்ட சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் உத்திரமூர்த்தி. இவரது மகள் உஷா ராணி (வயது 12). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

உஷாராணியை அதே பகுதியைச் சேர்ந்த சேகர்(35) கழுத்தை நெரித்து கொன்று கரும்பு தோட்டத்தில் புதைத்தார். போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு சேகரை கைது செய்தனர்.

அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

நான் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள கொண்டசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவன். கூலிவேலை பார்த்து வந்தேன். உஷாராணியின் தாயார் மீரா ஒருநாள் பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்த போது நான் எட்டிப் பார்த்தேன். அவர் என்னை அவமானமாக திட்டினார். இதுகுறித்து அவரது கணவர் உத்ரமூர்த்தியிடம் கூறியிருக்கிறார். அவரும் என்னை திட்டினர். இதனால் அவர்கள் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இந்நிலையில் உஷா ராணியின் அக்காவின் கையைப் பிடித்து இழுத்தேன். அவர் இதுபற்றி பெற்றோரிடம் கூறியதும் அவர்கள் வீட்டிற்கு வந்து என்னை தாக்கினார்கள். இதனால் எப்படியும் அவரது குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த நிலையில் தான் உஷாராணியும் அவரது தாயார் மீராவும் வயலுக்கு சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் உள்ள கோவிலில் உஷாராணி தன் பாட்டி முனியம்மாளுடன் பேசிக்கொண்டிருந்தார்.

மீரா மட்டும் வயலுக்கு சென்றார். இதைப்பார்த்த நான் உஷாராணியிடம் ‘உனக்கு வெள்ளரி பிஞ்சு பறித்து தருகிறேன். என்னுடன் வா’ என்று அழைத்தேன். இதை நம்பிய உஷாராணி தன் பாட்டி முனியம்மாளிடம் சொல்லிவிட்டு என்னுடன் வந்தாள்.

நான் அவளை அழைத்துக் கொண்டு கரும்பு தோட்டத்துக்கு சென்றேன். பின்னர் உஷா ராணியை பலாத்காரம் செய்ய முயன்றேன். உஷாராணி மறுப்பு தெரிவித்து ஓடினாள். இதுபற்றி என் வீட்டில் சொல்வேன் என்று கூறினாள்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் கல்லால் உஷாராணியின் தலையில் தாக்கினேன். இதில் உஷா ராணி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை கரும்பு தோட்டத்துக்குள் இழுத்துச் சென்று போட்டேன்.

அப்போது கொஞ்சம் உயிர் இருப்பது தெரிய வந்தது. இதனால் உஷா ராணியின் கழுத்தில் கால் வைத்து மிதித்தேன். இதில் அவள் மூச்சுதிணறி இறந்தாள். பின்னர் வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு மீண்டும் கரும்பு தோட்டத்துக்கு சென்றேன். அங்கு குழிதோண்டி உஷா ராணியின் உடலை புதைத்தேன். அந்த பகுதியில் பதுங்கியிருந்த என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு சேகர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காபுல்: வெடிகுண்டுகள் நிரப்பிய லாரியை ஓட்டல் மீது மோதி தலிபான் தீவிரவாதிகள் ஆவேச தாக்குதல்..!!
Next post சீனாவில் ‘சியாமிஸ்’ என்ற அரிய வகை அழகான 400 குட்டி முதலைகள் பறிமுதல்..!!