அனுமதி மறுத்த பெற்றோர், தற்கொலை செய்துகொண்ட மாணவன்…!!
கிரிக்கட் போட்டியொன்றில் கலந்து கொள்ள பெற்றோர் அனுமதியளிக்க மறுத்த காரணத்தால் பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 16 வயதான மாணவன் ஒருவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
குறித்த மாணவன் தன் பெற்றோரிடம் கிரிக்கட் போட்டியொன்றுக்குச் செல்ல அனுமதி கோரியுள்ள நிலையில் பெற்றோர் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து தனது அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்ட மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
மாணவனின் உடல் அம்பலாங்கொடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
**** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating