வன்னிப்புலிகளின் முகாம் கருணாஅம்மான் தரப்பினரால் தாக்கியழிப்பு! 11பேர் பலி! மூவர் கைது!!
நேற்று அதிகாலை 4:30 மணியளவில் மட்டக்களப்பு, வாழைச்சேனை, பனிச்சங்கேணிப் பகுதியிலுள்ள வன்னிப்புலிகளின் முகாம் ஒன்று கருணாஅம்மானின் இராணுவதரப்பினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 11வன்னிப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் உயிருடன் பிடிக்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருணாஅம்மானின் இராணுவப் பொறுப்பாளர் மார்க்கனின் திட்டமிடலில் ரீஐசீலன், மங்களன்மாஸ்டர், சின்னத்தம்பி ஆகியோரின் தலைமையில் சென்ற தாக்குதல் அணியினர் புலிகளின் முகாமை சுற்றி வளைத்து கருணாஅம்மான் அணி திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இத் தாக்குதலை எதிர் கொல்லமுடியாத நிலையில் புலி உறுப்பினர்கள் நாலா புறமும் சிதறி ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலை முடித்துவிட்டு பனிச்சங்கேணி பாலம்வரை சென்றுவிட்டே தாக்குதல் அணியினர் தளம் திரும்பியுள்ளனர்.
இத் தாக்குதலில் வைரமுத்து ரவி-திருப்பரன் (வயது 21), அமிர்தலிங்கம் மோகன்- காளிவேந்தன் (வயது 22) மற்றும் கந்தலிங்கம் சுதர்ஷன்- ஆதிமைந்தன் (வயது 16) ஆகிய புலி உறுப்பினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதலின் போது அம்முகாமிலிருந்த பெருமளவு ராணுவத் தளபாடங்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தம்மால் பிடிக்கப்பட்ட வன்னிப்புலி உறுப்பினர்களை சர்வதேச நிறுவனங்கள் ஊடாக பெற்றோரிடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது.
THANKYOU For… www.athirady.com