விபத்தில் பலியான கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தையை தந்தையிடம் கொடுக்க மறுக்கும் மருத்துவமனை…!!
கடந்த 4 ஆம் திகதி காலி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான கர்ப்பிணிப்;பெண்ணின் குழந்தையை பெற்று கொள்வதற்காக வந்த தந்தையிடம் மஹமொதர மருத்தவனையின் அதிகாரிகள் குழந்தையை கொடுக்காமல் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் குழந்தையை மருத்துவமனையின் அதிகாரிகள் பராமரித்து வந்துள்ளதுடன், குறித்த தந்தை குழந்தையை பெற்று கொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்த போது, சட்டரீதியான ஆவணங்களை கொண்டு வருமாறு மருத்துவமனையின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பின்னர் தந்தையினால் குறித்த ஆவணங்கள் கொண்டு வரப்பட்டாலும் குழந்தையை பெற்று கொடுக்காது, குழந்தையை குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்ப வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குறித்த தந்தையிடம் வினவ முற்பட்ட போது, மருத்துவமனையின் பாதுகாப்பு பிரிவு இடையூறு ஏற்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating