வீதி விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் காயம்..!!
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த குடும்பத்தினர் உறவினர் ஒருவரை சந்தித்து விட்டு தமது வீடு திரும்பும் வழியில் கல்குடா விதி பேத்தாழையில் இவ்விபத்தினை எதிர்நோக்கியதாக தெரிவித்தனர்.
கல்குடா வீதி வழியாக மோட்டர்ர் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட குடும்பஸ்த்தர்கள் மீது வாழைச்சேனை பகுதியில் இருந்து பாசிக்குடா நோக்கி வேகமாக வந்த நிஸான் ரக வான் ஆனது தமது வேக கட்டுப்பாட்டினை மீறி அவர்கள் மீது பின்னால் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
இதன்போது வானில் மோதுண்ட மோட்டார் சைக்கிளானது குடும்பஸ்த்தர்களுடன் சிறிது தூரம் வீதியில் இழுத்துவரப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்கள் பலத்த காயத்திற்குள்ளானதாகவும் தெரிவித்தனர்.
இதன்போது சிவன் கோயில் வீதி பேத்தாழையைச் சேர்ந்த சா.வினோதன் (வயது 31), திருமதி.றோஸ்மேரி வினோதன் மற்றும் அவர்களது 3 வயது நிரம்பிய மகளான நுபேசனா ஆகியோர்களே இவ்வாறு விபத்திற்குள்ளாகி வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.
இதேவேளை பொதுமக்கள் குறித்த வான் மற்றும் சாரதியை தாக்குவதற்கு முயச்சித்த வேளை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று கலகம் இடம்பெறாத வண்ணம் தடுத்துள்ளதும் வான் சாரதியை கைது செய்தததுடன் வான் கைப்பற்றப்பட்டு கல்குடா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பபட்டு விசாரணைகளை மேற்கொண்டிருந்தாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதி மற்றும் வான் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating