தண்டவாளம் அருகில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவரை, காதல் வலையில் வீழ்த்திய பேராசிரியை…!!

Read Time:8 Minute, 0 Second

201608241219250460_collge-student-myestery-dead-police-investigation-in-teacher_SECVPFஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் புனிதமானதாகும். ஆனால் சில நேரங்களில் அந்த புனிதம் கெட்டுப்போகும் அளவுக்கு சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்தான். இது தொடர்பான போட்டோக்களும், செய்திகளும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட இணைய தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊரை விட்டு ஓடிப்போன ஆசிரியையும், மாணவனும் திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் தனிக்குடித்தனம் நடத்தியது ஓராண்டுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

அன்று நெல்லைச் சீமையில் மலர்ந்த அதுபோன்ற காதல் இன்று சென்னையிலும் மலர்ந்துள்ளது. 19 வயதே நிரம்பிய கல்லூரி மாணவர் ஒருவர் 2 குழந்தைகளுக்கு தாயான 38 வயது பேராசிரியையுடன் ஓட்டம் பிடித்து விட்டு பின்னர் வீடு திரும்பியதும், மாணவரோ மர்மமான முறையில் பலியாகி இருப்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவரை காதல் வலையில் வீழ்த்திய பேராசிரியை, 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு விட்டு 3 நாட்கள் மாணவருடன் உல்லாசமாக ஊர் சுற்றியதும் அம்பலமாகி உள்ளது.

தாம்பரத்தை அடுத்த காமராஜபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் அரவிந்த்குமார், கவுரிவாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி அன்று அரவிந்த்குமார் திடீரென காணாமல் போனார்.

இதுபற்றி அவரது பெற்றோர்கள் சேலையூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து வந்த நிலையில் 21-ந்தேதி அன்று அரவிந்த்குமார் பெருங்களத்தூர் ரெயில் நிலையம் அருகில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார். ரெயிலில் அடிபட்டு அவர் உயிரிழந்திருப்பதாக கூறி தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சேகர் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் அதே கல்லூரியின் பேராசிரியை ஒருவரும் 17-ந்தேதி காணாமல் போய் 3 நாட்கள் கழித்து 20-ந்தேதி திரும்பியதும் தெரிய வந்தது.

இது தொடர்பாகவும் அவரது கணவர் போலீசில் புகார் அளித்திருந்தார். பேராசிரியை திரும்பி வந்து விட்டதால் அந்த புகார் மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவர் அரவிந்த்குமாரின் பெற்றோர் தாம்பரம் ரெயில்வே போலீசில் புகார் ஒன்றை அளித்தனர். அதில் தங்களது மகனுடன் அவன் படித்த கல்லூரியின் பேராசிரியை ஒருவரும் சென்றிருக்கிறார். அவர் பத்திரமாக வீடு திரும்பி விட்ட நிலையில் அரவிந்த்குமார் மட்டும் பலியாகி இருப்பது சந்தேகமாக உள்ளது என்றும், இதுபற்றி பேராசிரியையிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதை தொடர்ந்து போலீசார் அது தொடர்பான விசாரணையில் இறங்கினர்.

மாணவர் அரவிந்த்குமார் படித்த கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அரவிந்த்குமாரின் நண்பர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் பேராசிரியையும், மாணவர் அரவிந்த்குமாரும் காதலித்து வந்திருப்பது தெரிய வந்தது.

பாடம் சொல்லிக் கொடுக்க சென்ற இடத்தில், அரவிந்த்குமாரை பேராசிரியை காதல் வலையில் வீழ்த்தியதும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 17-ந்தேதி அன்று அரவிந்த்குமாருடன் பேராசிரியை ஓட்டம் பிடித்தார். 2 பேரும் பஸ் ஏறி திருச்சிக்கும், திருநெல்வேலிக்கும் சென்று விட்டு புதுவை வந்தனர்.

3 நாட்கள் காதல் போதையில் மாணவர் அரவிந்த்குமாருடன் ஒன்றாக சுற்றிய பேராசிரியைக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகளின் ஞாபகம் வந்தது. உடனே இருவரும் புதுவையில் இருந்து சென்னை திரும்ப திட்டமிட்டனர்.

பஸ்சில் புறப்பட்ட இருவரும் திண்டிவனம் வரை ஒன்றாகவே வந்தனர். அதன் பின்னர் நான் சென்னைக்கு வரவில்லை என்று கூறிவிட்டு அரவிந்த் குமார் திண்டிவனத்தில் இறங்கிவிட்டார். பேராசிரியை மட்டும் வீடு திரும்பினார். கோபித்துக் கொண்டு வெளியில் சென்று விட்டேன் என்று கூறிய அவரிடம், போலீசார் விசாரித்தனர். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக நான் வீட்டை விட்டு சென்றுவிட்டேன் என்று கூறிவிட்டார்.

தற்போது அவருடன் சென்ற மாணவர் பலியான பின்னர்தான் இருவரின் காதல் விவகாரமும் தெரிய வந்துள்ளது.

திண்டிவனத்தில் இறங்கிய மாணவர் அரவிந்த்குமார் அவமானம் தாங்காமல் சென்னை வந்த பின்னர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அவரது பெற்றோர் அளித்த புகார் தொடர்பாக பேராசிரியையை அழைத்து இன்று விசாரணை நடத்துகிறார்கள்.

இதில் அரவிந்த்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு அவர் காரணமாக இருப்பது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதன் மூலம் அரவிந்த்குமாரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பேராசிரியை சிக்குகிறார்.

படிக்க வேண்டிய வயதில் பேராசிரியையிடமே காதலில் விழுந்து மாணவர் ஒருவர் வீழ்ந்து போய் இருப்பது சோகத்தின் உச்சமே.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் நன்றாக படிக்காததால் மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தை..!!
Next post நோயின்றி வாழும் வாழ்க்கை…!!