டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு பாதுகாப்பு படை வீரர் தற்கொலை..!!
டெல்லி மெட்ரோ ரெயில் குழுமத்தின் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்து வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான ஆல்பெஷ் ரத்வுட், மெவாலா மகாராஜ்புர் ரெயில் நிலையத்தில் இன்று காலை தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக ஆல்பெஷ் ரத்வுட் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தாலும், இந்த சம்பவம் பற்றி உரிய நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating