வவுனியாவில் புத்தர்சிலைகள் உடைப்பு…!!
கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் இருந்த புத்தர் சிலைகள் இன்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,
கனகராயன்குளம் பகுதியில் விஷேட அதிரடிப்படைப் பொலிஸ் முகாமிற்கு அருகில் 210 வது கிலோமீற்றர் கல்லிற்கு முன்புறமாக அமைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றடி உயரமான புத்தர் சிலை ஒன்றும், ஒன்றரை அடி உயரமான புத்தர்சிலை ஒன்றும் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத நபர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை உடைக்கப்பட்ட புத்தர்சிலைகள் இரண்டும் குறித்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது, அந்த புத்தர் சிலைகளை பொலிஸாரே விசாரணைக்கு எடுத்து செல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல கோணங்களில் கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating