உயிர் காக்கும் வைத்தியரின் கவனயீனம்! யாழில் விபத்து…!!
கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் கார் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ள போதும் உயிர்ச் சேதம் எதுவும் இடம் பெறவில்லை.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
யாழ். சுன்னாகத்தில் இருந்து மோட்டார் வண்டியில் யாழ்ப்பாணம் நோக்கி குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தீடீரெனப் பிரதான வீதியை நோக்கிச் செலுத்தப்பட்டுள்ளது.
காரின் சாரதி கவனயீனமாக வாகனத்தை செலுத்திய காரணத்தால் எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள், சற்றும் எதிர்பாராத வகையில் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.
இதேவேளை காரின் சாரதி அப்பிரதேசத்தில் மருந்தகம் ஒன்றினை நடாத்தி வரும் வைத்தியர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் வைத்தியர் செலுத்தி வந்த காரின் முன்பகுதி கடுமையான சேதங்களுக்கு உள்ளானது. எனினும், வைத்தியருக்கோ, மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குடும்பஸ்தருக்கோ காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் குடும்பஸ்தர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளுக்கும் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இதன்போது தன் மீது தான் தவறுள்ளது என்பதை முதலில் வைத்தியர் ஏற்க மறுத்த போதும், பின்னர் சம்பவ இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் வைத்தியர் மீது தான் தவறுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியதையடுத்து அவர் தம் மீதான தவறை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதனையடுத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டாம் என வைத்தியர் குடும்பஸ்தரை கேட்டுக் கொண்டதற்குகிணங்க அவரும் அதற்கு உடன்பட்டுள்ளார்.
மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தி வந்த குடும்பஸ்தர் மெதுவாக வந்த காரணத்தாலேயே உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating