இராணுவ அதிகாரி பணி இடைநீக்கம்…!!
அத்துருகிரியவில் தமது மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் செய்த இராணுவ அதிகாரி பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ அதிகாரி, இரண்டு நாட்களுக்கு முன்னர் தமது மனைவியின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் விசாரணைகள் முடிவடையும் வரை அவரை பணியில் இருந்து இடைநீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த துப்பாக்கி பிரயோகத்தை இனந்தெரியாதவர்களே மேற்கொண்டதாக முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating