தத்தெடுத்து வளர்த்த 3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் விஞ்ஞானி கைது…!!
நாக்பூர், வார்தா ரோட்டில் உள்ள அஜ்னி சதுக்கத்தை சேர்ந்தவர் மசூத் அன்சாரி(வயது 71). முன்னாள் விஞ்ஞானியான இவர் இரண்டு முறை திருமணம் முடிந்தவர். இருப்பினும் இவருக்கு குழந்தை இல்லை. இதையடுத்து மசூத் அன்சாரி 3 சிறுமிகளை தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார். இதில் முதல் சிறுமிக்கு தற்போது 16 வயதும், 2–வது சிறுமிக்கு 11 வயதும், கடைசி சிறுமிக்கு 6 வயதும் ஆகிறது. இந்த 3 சிறுமிகளையும் மசூத் அன்சாரி கட்டாயப்படுத்தி கற்பழித்து வந்தாக தெரிகிறது.
இந்த நிலையில் 16 வயது சிறுமி தன் தோழி குடும்பத்தினரின் உதவியுடன் தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இந்த பிரச்சினையை குறித்து தொண்டு நிறுவனத்தினர் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் முன்னாள் விஞ்ஞானி மசூத் அன்சாரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 சிறுமிகளையும் மீட்டனர். ஆனால் இந்த புகாரை மசூத் அன்சாரி மறுத்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு கல்வியை வழங்கவே அவர்களை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக அவர் போலீஸ் விசாரணையின்போது கூறினார். இருப்பினும் பெண் குழந்தைகளை தத்தெடுத்தற்கான ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை.
எனவே அந்த குழந்தைகள் முறைபடி தத்தெடுக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating