தமிழகத்தில் யாழ் – குருநகர் யுவதி தீக்குளித்து தற்கொலை…!!

Read Time:2 Minute, 18 Second

1400839222-6294தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த யுவதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்பாணம் – குருநகரில் உள்ள ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகள் சரோன் கருண்சி (வயது 25) இவருக்கும், இலங்கையை சேர்ந்த டாக்டர் நவனீதராஜ் (31) என்பவருக்கும் திருமணமாகி ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார்.

சரோன் கருண்சி, தற்போது குடும்பத்தோடு கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் வரண்டாவில் சரோன் கருண்சி திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாமாக உயிரிழந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் சப்–இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்திரவிடப்பட்டு உள்ளது என தமிழக செய்திகள் குறிப்பிடுகின்றன.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் உடுவில் கல்லூரி ஆசிரியரின் வீட்டில் தாக்குதல்…!!
Next post நீங்கள் வாங்கும் உணவுப் பொருள் கலப்படமா? எப்படி கண்டுபிடிப்பது…!!