பெருங்களத்தூர் அருகே கார் கவிழ்ந்து பெண் பலி…!!
ஆவடி அருகே உள்ள அண்ணனூரை சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி சுதா (வயது 55). இவர்கள் உறவினர்கள் 7 பேருடன் திருப்பதி கோவிலுக்கு காரில் சென்றனர். பின்னர் அனைவரும் நேற்று இரவு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
திருத்தணியை அடுத்த பெருங்களத்தூர் அருகே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் சுதா சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் காரில் இருந்த பிரகாஷ், தீபா, சசிகலா, பிரேமா, யஸ்வந்த்ஸ்ரீ, மஞ்சு, ஒரு வயது குழந்தை சித்தார்த், டிரைவர் தாமோதரன் ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரக்கோணம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 8 பேருக்கும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating