அரசு ஆஸ்பத்திரியில் இறந்ததாக சான்றிதழ் கொடுத்த குழந்தைக்கு உயிர் வந்தது..!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாசரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பவானி. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்திற்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள். குழந்தையின் இறப்பு சான்றிதழையும் வழங்கினார்கள். பின்னர் குழந்தையை ஒரு துணியில் சுற்றி பவானியிடம் கொடுத்தனர். அவர் குழந்தையை நெஞ்சோடு அனைத்தபடி கதறி அழுதார்.
அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சு வந்தது. குழந்தையின் உடல் அசைந்தது. குழந்தை உயிருடன் இருப்பது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதித்து செயற்கை சுவாசம் அளித்தனர்.
குழந்தை அசைவற்று கிடந்த போது கார்டியாத் மசாஜ் செய்யாமலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறிய டாக்டர்களை கண்டித்து பெற்றோரும் உறவினர்களும் ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டாக்டர்கள் சமரசம் படுத்தினார்கள்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating