வங்காளதேசத்தில் அடுத்தடுத்து சாலை விபத்து: 17 பேர் உயிரிழப்பு…!!
வங்காளதேசத்தில் இன்று பல்வேறு இடங்களில் சாலை விபத்து ஏற்பட்டது. முதல் விபத்து டாக்கா – செல்ஹெட் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. வேகமாக சென்ற பஸ் எதிரில் வந்த மினி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
டாக்கா-தங்கில் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாவது சாலை விபத்து நிகழ்ந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவன தொழிலாளர்கள் என்றும் வளைவில் திரும்பும்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்ததாகவும் டாக்கா போலீஸ் அதிகாரி மொகமது ஹுமாயுன் கபீர் தெரிவித்தார்.
3-வது சாலை விபத்து டாக்கா-பரிசல் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. ஆட்டோ மீது வேகமாக சென்ற பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் அதிகமான பேர் காயமடைந்தனர். இந்த சாலை விபத்துகளுக்கான காரணம் குறித்து டாக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating