வங்காளதேசத்தில் அடுத்தடுத்து சாலை விபத்து: 17 பேர் உயிரிழப்பு…!!

Read Time:2 Minute, 0 Second

201609161859088569_17-killed-nearly-40-injured-in-bangladesh-road-accidents_secvpfவங்காளதேசத்தில் இன்று பல்வேறு இடங்களில் சாலை விபத்து ஏற்பட்டது. முதல் விபத்து டாக்கா – செல்ஹெட் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. வேகமாக சென்ற பஸ் எதிரில் வந்த மினி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

டாக்கா-தங்கில் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாவது சாலை விபத்து நிகழ்ந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவன தொழிலாளர்கள் என்றும் வளைவில் திரும்பும்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்ததாகவும் டாக்கா போலீஸ் அதிகாரி மொகமது ஹுமாயுன் கபீர் தெரிவித்தார்.

3-வது சாலை விபத்து டாக்கா-பரிசல் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. ஆட்டோ மீது வேகமாக சென்ற பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் அதிகமான பேர் காயமடைந்தனர். இந்த சாலை விபத்துகளுக்கான காரணம் குறித்து டாக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்நாடகத்தை கண்டித்து சிவகங்கை-விருதுநகர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்…!!
Next post டெங்கு, சிக்குன்குனியா உயிரிழப்பு: அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு…!!