பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு…!!
பாகிஸ்தான் மசூதியில் ஜும்மா தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான எல்லைப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் மொஹ்மான்ட் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு உட்பட்ட அம்பர் தாலுக்காவில் உள்ள மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் ‘ஜும்மா’ தொழுகைக்கு கூடியிருந்தனர்.
பிற்பகல் 2 மணியளவில் வழிபாட்டுக்கு வந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15-க்கும் அதிகமானோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். படுகாயங்களுடன் சுமார் 40 பேர் அருகாமையில் உள்ள பஜாவுர், சர்சாடா மற்றும் பெஷாவர் நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி அவர்களில் சிலர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 28 பேர் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் உள்ள கடைசி தீவிரவாதியை ஒழிக்கும்வரை தீவிரவாத தடுப்பு படைகளின் அதிரடி வேட்டை தொடரும் என அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிப் அறிவித்த மறுநாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating