இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்தோம்: சாட்னா டைட்டஸ்…!!

Read Time:4 Minute, 1 Second

201609171405455214_perfect-marriage-with-the-consent-of-both-registration_secvpfடைரக்டர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாட்னா டைட்டஸ்.

தமிழ், தெலுங்கில் வெளியான இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் கே.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த பட வினியோக நிறுவனத்தின் பங்குதாரர் கார்த்திக்.

இவர் ‘பிச்சைக்காரன்’ பட விளம்பரம் மற்றும் அறிமுகவிழா தொடர்பாக நடிகை சாட்னா டைட்டசை சந்தித்தார்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் அரும்பியது. பின்னர் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதன் மூலம் காதலை வளர்த்துக் கொண்ட சாட்னா டைட்டஸ் – கார்த்திக் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாட்னா டைட்டஸ் – கார்த்திக் இருவரும் சமீபத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இது பற்றி கூறிய கார்த்திக் “இரண்டு பேரின் பெற்றோர் சம்மதத்துடன் தான் எங்கள் பதிவு திருமணம் நடந்தது” என்று தெரிவித்து இருந்தார்.

ஆனால் சாட்னா டைட்டஸ் தாயார் மாயா இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். “என் மகள் சாட்னாவை கார்த்திக் மூளை சலவை செய்து எங்களிடம் இருந்து பிரித்து விட்டார். சில படங்களில் நடிக்க எனது மகள் வாங்கிய அட்வான்சையும் திருப்பிக் கொடுக்கச் செய்து இனி நடிக்க கூடாது என்று தடுத்து வைத்திருக்கிறார். என் மகளிடம் போனில் கூட பேச முடியாமல் செய்து விட்டார். பதிவு திருமணம் செய்ததாக சொல்வது பொய். என் மகளை அவரிடம் இருந்து மீட்பேன்” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் சாட்னா டைட்டஸ், அவரது காதல் கணவர் கார்த்திக் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அன்புடையீர் வணக்கம். கார்த்திக், சாட்னா டைட்டஸ் ஆகிய நாங்கள் இருவரும் மனதார காதலித்தோம். இருவரின் பரிபூரண சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் எங்களுடைய இரு குடும்பங்கள், சுற்றம், நட்புகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆதரவுடன் பிரமாண்டமான முறையில் எங்கள் திருமணம் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றென்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் கோரும் கார்த்திக், சாட்னா டைட்டஸ்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இருவரும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்றைய சில பெண்களிடம் தமிழ் சமையல் இருக்கிறதா?…. சிக்கித் தவிக்கும் ஆண்கள் எத்தனை பேர்…!! வீடியோ
Next post சோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி…!!