ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Read Time:1 Minute, 26 Second

madras-high-courtராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக ​பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரும் இடம்பெற வேண்டும் என்றும், அதுவரை பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறி ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ராம்குமார் தரப்பு வாதத்தை ஏற்று பிரேத பரிசோதனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவாதி கொலை வழக்கு:தற்கொலை செய்துகொண்ட ‘ராம்குமாரின் கையில் சிராய்ப்பு..!!
Next post 100 ரூபா , மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு 42 பேருந்துகளை கொளுத்தி எரித்த பெண்..!!