வங்காள தேசம் படகு விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு…!!
வங்காளதேசத்தின் தென்பகுதியில் உள்ள பரிசால் மாவட்டம், பனாரிபாரா பகுதியை சேர்ந்த 80 பேர் படகொன்றில் நேற்று சந்தியா ஆற்றை கடந்த போது படகு திடீரென ஆற்றின் நடுவே நிலைதடுமாறி தண்ணீர் கவிழ்ந்தது.
விபத்தில் சிக்கிய சிலர் சிரமப்பட்டு, நீந்தி கரையை வந்தடைந்துள்ள நிலையில், 30க்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக கூறப்பட்டது. நேற்று 14 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேர் உடல்களை மீட்டுள்ளனர். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது.
படகு விபத்தில் காணாமல் போனவர்களில் இன்னும் 25 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating