கூடங்குளம் அருகே பெண்ணை வெட்டிக்கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை: நெல்லை கோர்ட்டு தீர்ப்பு..!!

Read Time:1 Minute, 42 Second

201609221635155460_woman-murder-case-farmer-life-sentence-near-koodankulam_tmbvpfநெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பால்வண்ணன். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது58). அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் முருகன் (47), விவசாயி. இவர்களிடையே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 26.6.2015 அன்று ஏற்பட்ட தகராறில் முருகன், இசக்கியம்மாளை வெட்டிக்கொன்று அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார். இச்சம்பவம் குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

நெல்லை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. பெண்ணை வெட்டிக் கொன்ற முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி கிளாஸ்டன் தாகூர் தீர்ப்பு வழங்கினார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேசியாவில் வெள்ளம்-நிலச்சரிவு: உயிரிழப்பு 26 ஆக உயர்வு…!!
Next post தினமும் மது போதையில் தகராறு: குடிகார கணவரை, உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி…!!