நாயை விழுங்க வந்த பாரிய மலைப்பாம்பை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த ஹிக்கடுவை மக்கள்…!!
ஹிக்கடுவை திரானாகம பிரதேச வீடொன்றுக்குள் நுழைந்து நாய் ஒன்றினை விழுங்குவதற்காக வந்த பெரிய மலைப்பாம்பு ஒன்றை பிரதேசவாசிகள் பிடித்துளள்னர்.
சம்பவ தினம் இரவு வீட்டுக்கு வெளியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு குறித்த வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்று பார்த்த போது வீட்டையொட்டி அமைக்கப்பட்டிருந்த நாய் கூண்டுக்கு அருகில் பெரிய மலைப்பாம்பு ஒன்று இருப்பதனை கண்டு கூச்சலிட்டு அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதனையடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து பாம்பை பிடித்திருந்தனர்.
பின்னர் இது தொடர்பில் ஹிக்கடுவை வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவித்ததனையடுத்து அவர்கள் குறித்த மலைப்பாம்பினை எடுத்துச் சென்று காலி, கொட்டவ வனப்பகுதியில் விடுவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating