மருத்துவர்களின் அலட்சியம் ; உயிரிழந்த இளம் தாய்…!!
மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக 20 வயதான இளம் தாய் உயிரிழந்த சோகச்சம்பவம் பயாகல – கட்டுகுறுந்து வத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தனது முதலாவது குழந்தை தாய் பால் குடிக்க மறுத்ததால் களுத்துறை – நாகொட மருத்துவனைக்கு வந்த தாய் ஒருவர் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த தாய் தொடர்பாக மருத்துவனை அதிகாரிகள் உரிய அவதானம் செலுத்தவில்லை என உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்துள்ள தாயின் உடலில் கிருமி தொற்று ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரேத பரிசோதனையில் திறந்த தீர்ப்பொன்று பெற்று கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த தாயின் மரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating