மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு ரிசர்வ் படை வீரர் பலி…!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட ரிசர்வ் படையினர், போலீசாருடன் இணைந்து முயற்சி எடுத்து வருகின்றனர்.
இன்று காலை 8 மணியளவில் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அகபேடா கிராமத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரும் கலந்து கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் பொருட்டு மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் அகபேடா பகுதிக்கு ரோந்து வந்தனர். அவர்கள் இன்று காலை 8 மணியளவில் காரெல் பள்ளத்தாக்கை கடந்தபோது அங்கு மாவோயிஸ்ட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த தாக்குதலில் ரிசர்வ் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு வீரர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த ரிசர்வ் படை வீரர்கள் இருவரும் அருகிலிருக்கும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை மாவோயிஸ்ட்டுகள் வெறுப்பதே இந்த தாக்குதலுக்கு காரணம் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating