சவுதிஅரேபியா சென்ற இங்கிலாந்து கப்பலில் தஞ்சை என்ஜினீயர் மர்ம சாவு…!!

Read Time:2 Minute, 23 Second

201609291510044773_thanjavur-engineer-mystery-dead-in-uk-ship_secvpfதஞ்சாவூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சிவராஜ் (வயது28). கப்பல் என்ஜினீயர்.

இங்கிலாந்தில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு பாமாயில் ஏற்றி வந்த சரக்கு கப்பலில் சிவராஜ் பயணம் செய்தார்.

பின்னர் அந்த கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது. நடுக்கடலில் சென்றபோது என்ஜினீயர் சிவராஜ் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

இதையடுத்து சரக்கு கப்பல் சென்னை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. சிவராஜ் உடலை துறைமுக போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

என்ஜினீயர் சிவராஜ் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே இதுபற்றிய விபரம் தெரிய வரும்.

இதுபற்றி தஞ்சாவூரில் உள்ள சிவராஜின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காசிமேடு, ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்தவர் அன்ன குமார் (50). மீனவர். இவர் காசிமேடு மீன்பிடி துறைமுக வார்ப்பு பகுதியில் விசைப்படகை பழுது பார்த்தார்.

அப்போது அன்னகுமார் கடலுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனா, தைவானை புயல் தாக்கியது: நிலச்சரிவில் 26 பேர் புதைந்தனர்…!!
Next post ஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்…!!