காதல் நிராகரிக்கப்பட்டதால் வீதியில் நிர்வாணமாக புரண்ட நபர்..!!
தான் காதலித்த யுவதி தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் நபர் ஒருவர் காதலர் தினத்தில் நிர்வாணமாக படுத்துப் புரண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
தான் காதலித்த யுவதி தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் நபர் ஒருவர் காதலர் தினத்தில் நிர்வாணமாக படுத்துப் புரண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
காதலர் தினமான கடந்த ஞாயிறன்று, மேற்படி நபர் ரோஜா மலர்கள் சகிதம் காதலியை அணுகி தனது காதலை தெரிவித்து அந்த யுவதியை திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.
ஆனால், அவரின் காதலை அந்த யுவதி ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து, மேற்படி நபர் தனது கையிலிருந்த ரோஜா மலர்களை வீதியில் வீசியெறிந்தார். அத்துடன், அவர் தனது ஆடைகளை களைந்துவிட்டு நடுவீதியில் படுத்துப் புரண்டதைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதன்போது பிடிக்கப்பட்ட படங்களும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந் நபர் வீதியில் கிடந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஏராளமான வாகனங்கள் வரிசையில் காத்துநின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating