மூன்று ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்…!!
Read Time:58 Second
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் மூன்று நேற்றுமாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
ஜப்பானிலிருந்து “Kashima”, “Setoyuki” மற்றும் “Asagiri” ஆகிய கப்பல்களேஇவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளன.
குறித்த கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் , இலங்கை கடற்படையினரால்வரவேற்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 12ம் திகதி வரையில் குறித்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – ஜப்பானுக்கு கடற்படைக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில்குறித்த கப்பல்கள் இலங்கை வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating