களியாட்ட விடுதிக்குள் நுழைந்து ரகளை செய்த முக்கிய நபர்…!!
நகர மண்டபத்தில் அமைந்துள்ள க்லிக் என்படும் இரவு விடுதி விடுதியினுள் நேற்று இரவு புகுந்த பிரபு ஒருவரின் மகன் உள்ளிட்ட குழுவினர், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரியை தாக்கியுள்ளனர்.
அத்தோடு குறித்த விடுதிக்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நபர்களின் தாக்குதல் காரணமாக இரவு நேர விடுதியின் பாதுகாப்பாளர் தற்போது வரை அவசர கிசிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜீவன் பிரேமதாஸ என்ற நபரே இவ்வாறு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த இரவு நேர விடுதியில் பிரபுவின் மகனுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவருடன் வந்தவர்களுக்கு உள்ளே அனுமதி வழங்கப்படாமையே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் இரவு நேர விடுதிகளில் தொடர்ந்து மோதல் ஏற்படுத்திக் கொண்ட கதாபாத்திரமாக முன்னாள் அமைச்சர் முர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா காணப்பட்டார்.
நீதிமன்றத்தினால் அவருக்கு இரவுநேர விடுதிகளுக்குள் நுழைய தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating