பிரபுதேவா-தமன்னாவால் தேவி சாத்தியமானது:ஏ.எல்.விஜய்…!!
பிரபுதேவா -தமன்னா நடிப்பில் உருவான ‘தேவி’ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் இப்படத்தை இயக்கியது கடினமாக இருந்தது என படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “இந்த படத்தில் பிரபுதேவா நடிப்பை மிகவும் அனுபவித்தேன் அவர் நடிக்கும் படங்களை நிறைய இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த கதையை நான் எழுதும் போது ஹீரோயினை முன்னிலைப்படுத்தும் கதையாகத் தான் இருந்தது. பிரபுதேவா வந்ததால் ஹீரோ படமாகிவிட்டது. இதில் நான் எதிர்பார்த்ததற்கு மேல் அவர் நடித்திருக்கிறார். அவர் எதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்பவர். அவரிடம் ஒரு உற்சாகம் மகிழ்ச்சி இருந்தது. இதை இயக்கியது பெருமையாக இருக்கிறது.
‘தேவி’ படத்தை 3 மொழிகளில் இயக்க மிகவும் கஷ்டப்பட்டேன். பிரபுதேவா ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் நடித்து விடுவார். ஆனால் மூன்று மொழிகளைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மொழிகளில் நடித்ததால் மற்ற நடிகர் நடிகைகளை மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் இயக்கும் போது 3 படங்களை இயக்கியது போன்ற வேலைப்பளு இருந்தது.
இரவு பகலாக தூக்கமே இல்லாமல் வேலை செய்திருக்கிறோம். இனி மூன்று மொழி படங்களை இயக்க கூடாது என்று எண்ணும் அளவுக்கு ‘தேவி’ படத்துக்காக கஷ்டப்பட்டு விட்டேன். என்றாலும் பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் போன்றோர் கொடுத்த ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமானது”என்றார்.
Average Rating