வாழ்வே வெறுத்து விட்டது! தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞன் தற்கொலை..!!
மாத்தறை – காலிதாச பகுதியில் நேற்று காலை 21 வயதுடைய இளைஞர் ஒருவர், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலிதாச பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் கையடக்க தொலைபேசியில் உரையாடியவாறு இரயில் வருவதை கண்டவுடன் திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மேலும், “எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது… எனது வாழ்க்கையின் இறுதி நாள்இன்றாகும், அந்த அளவிற்கு எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது” என பேஸ்புக்கில் ஒரு பதிவை இட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த இளைஞன் காதலில் ஏற்பட்ட மனவிரக்தி காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இளைஞன் தற்கொலை செய்துகொள்வது அந்தப் பகுதில் உள்ள சி.சி.டி.வி கெமராவில் பதிவாகி உள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating