இருவேறு இடங்களில் இரண்டு சடலங்கள் மீட்பு…!!
Read Time:1 Minute, 14 Second
அனுராதபுரம், நுவரவெவ பிரதேசத்தில் பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் 50 முதல் 60 மதிக்கத்தக்க ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சடலம் அடையாளம் காணமுடியாத அளவுக்கு பழுதடைந்துள்ளதாகவும் அது அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டார அல்லது இயற்கை மரணமா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி வருவதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இளைஞனின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating