வாகனத்தின் வேகத்தை கண்டறியும் புதிய முறை நவம்பரில் நடைமுறை…!!
தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக பாதைகளில் வாகனத்தின் வேகத்தை கண்டறிவதற்குபுதிய முறை ஒன்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முறை காரணமாக அதிவேகப் பாதையில் இடம்பெறும் விபத்துக்களின்எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம் என அதிவேகப் பாதைகள் பராமரிப்பு மற்றும்மேலாண்மை பிரிவு பணிப்பாளர் எஸ்.ஒப்பநாயக்கதெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டுள்ளார்.
கணினி கண்டறிதல் அமைப்புக்களை கட்டுப்பாட்டு அறைக்குள் நிறுவுவதன் மூலம்வாகனத்தின் வேகத்தை கண்டறிந்து கொள்ள முடியும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
இரவிலும் வாகனங்களின் வேகத்தை கண்டறிதலுக்கு இந்த முறை பயன்படுத்தப்படும்என்று கூறியுள்ளார்.
புதிய அமைப்பு தற்காலிகமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்தமாதம் இந்த திட்டத்தை செயற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.
Average Rating