பம்பலப்பிட்டி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு…!!
Read Time:1 Minute, 8 Second
கொழும்பு – பம்பலப்பிட்டி, மெரைன் ரைவ் வீதியில் இன்று (14) காலை 10 மணி அளவில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் கடற்கரையில் ஒதுங்கி உள்ள நிலையிலே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இடத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொது மக்களால் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மேலும், மீட்கப்பட்ட சடலம் யாருடையது என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பம்பலபிடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating