பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் – ஐவர் வைத்தியசாலையில்…!!
Read Time:1 Minute, 23 Second
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்த மருத்துவ பீட முதலாம், இரண்டாம் வருட மாணவர்களுக்கிடையே நேற்று(13) மாலை ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியுள்ளது.
முதலாம் வருட மாணவர்கள் விடுதியை கழுவிக்கொண்டிருக்கும் போது இரண்டாம் வருட மாணவர்களின் அறைக்குள் தண்ணீர் சென்றமையே மோதலுக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் போது காயமடைந்த தீப்தி நுவன் (21 வயது), எச்.எம்.டி.சன்னக ஹேமன்த (22 வயது), புருசோத்தம் (21 வயது), கிரிஷாந் (22 வயது) மற்றும் முகம்மட் ஹாரிஸ் கான் (21வயது) ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating