3 வயது சிறுமியை கடத்திய திருடனை விரட்டி பிடித்த போலீஸ் கான்ஸ்டபிள்…!!

Read Time:1 Minute, 34 Second

201610190445291781_man-arrested-for-kidnapping-three-year-old-girl_secvpfடெல்லி மாநிலத்தில் 3 வயது சிறுமியை கடத்தி தப்பித்து போக முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியின் தாய்மூர் நகர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. சப்நம் என்ற பெண்மணி தன்னுடைய கணவனின் இறைச்சி கடையில் இருந்து மகன் ஆர்ஷ் மற்றும் 3 வயது மகள் பர்ஹிம் ஆகியோருடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

மகன் ஆர்ஷை கையில் பிடித்துக் கொண்டு வர, மகள் பர்ஹிம் அவர்களுக்கு பின் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென அசோக் நெகி என்ற ஆசாமி மகள் பர்ஹிமை கடத்திக் கொண்டு ஒட முயன்றான்.

உடனடியாக தன்னுடைய மகளை காப்பாற்றுமாறு தாய் சப்நம் கத்தினார். அங்கிருந்த மக்கள் கடத்தியவனை பிடிக்க முயன்றனர். அவர்களோடு அங்கு பணியில் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் லில்லு என்பவரும் விரட்டி பிடித்து சிறுமியை மீட்டார்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து சிறுமியை காப்பற்றியதோடு, கடத்தலில் ஈடுபட்ட நபரையும் பிடித்த போலீஸ் கான்ஸ்டபிளை பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது..!!
Next post டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் உடை அணிந்து வந்த தீபிகா படுகோனே…!!