போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது…!!
Read Time:1 Minute, 21 Second
போலி ஐயாயிரம் நாணயத் தாள்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 19 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினால் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தேக நபர்களில் ஒருவர் முயற்சித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நாணயத்தாள் போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து மற்றைய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கலேபிந்துனுவௌ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating