விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபகரமாக பலி…!!

Read Time:2 Minute, 8 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2மட்டக்களப்பு –வாழைச்சேனை பிரதான வீதியில் சத்துருக்கொண்டானில் நேற்று (22) இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

சத்துருக்கொண்டான் பொலிஸ் சாவடிக்கு அருகில் உள்ள வீதி வளைவில் நேற்று இரவு 9.30மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறுமுகத்தான்குடியிருப்பினை சேர்ந்த வி.ரதிதரன் (17வயது), க.விதுசன் (17வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தபோது குறித்த வளைவு பகுதியில் வேகத்தினைக்கட்டுப்படுத்தமுடியாமல் மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது விதுசன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளைச்செலுத்திச்சென்றவருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையெனவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் கூறியுள்ளனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் தியாகேஸ்வரனின் பணிப்புக்கு அமைய மரண விசாரணை நடைபெற்றுவருவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழைச்சேனையில் வீடு தீக்கிரை! வீடின்றி அம்மா வீட்டில் தஞ்சம்…!!
Next post வேடிக்கையான ஆங்கில ஆசிரியர்…!! வீடியோ