வடக்கில் பூரண ஹர்த்­தல் : அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு…!!

Read Time:6 Minute, 53 Second

batti_harthal_004யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் படு­கொலை செய்­யப்­பட்­டதை கண்­டித்து நாளைய தினம் வடக்கில் பூரண ஹர்த்­தா­லுக்கு தமிழ்க்­கட்­சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்­துள்­ளன.

அத்­துடன் இதற்கு வடக்கின் அனைத்து வர்த்­தக சங்­கங்­களும் பூரண ஆத­ரவு அளித்­துள்­ள­தோடு, அரச தனியார் பேருந்து சங்­கங்­களும் தமது சேவை­களை புறக்­க­ணிப்­ப­தற்கு இணங்­கி­யுள்­ளன.

யாழ். காங்கேசன்துறை வீதி குளப்­பிட்­டியில் இடம்­பெற்ற பொலிஸாரின் துப்­பாக்கி சூட்டு சம்­ப­வத்தில் சுன்­னாகம் கந்­த­ரோடைப் பகு­தி­யினைச் சேர்ந்த விஜ­ய­குமார் சுலக்சன் (வயது 24), கிளி­நொச்சி – இர­ணை­மடுப் பகு­தி­யினைச் சேர்ந்த நட­ராஜா கஜன் (வயது 23) எனும் யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இருவர் பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். இதில் ஒரு மாண­வனின் விலா எலும்பு பகு­தி­யூ­டாக துப்­பாக்கி சன்னம் துளைத்து கொண்டு சென்­றி­ருந்­தது.

இச் சம்­ப­வத்­தை­ய­டுத்து நேற்­றைய தினம் யாழில் உள்ள விருந்­தினர் விடுதி ஒன்றில் தமிழ்க்­கட்­சிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி­ ஆராயந்தனர். இதன் போது மாண­வனின் கொலையை கண்­டித்து வடக்கு மாகாணம் முழு­வதும் பூரண கடை­ய­டைப்பை நடத்தி ஹர்த்தால் மேற்­கொள்ள அழைப்பு விடு­வது என தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இதன் பின்னர் குறித்த முடிவை அறி­விக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பு யாழ். ஊடக அமை­யத்தில் நேற்­றைய தினம் மாலை 4.30 மணி­ய­ளவில் நடை­பெற்­றது.

இதில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவ கட்­சி­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டி­ருந்­தனர். இதன் போது சட்­டத்­த­ரணி என்.ஸ்ரீகாந்தா கருத்து தெரி­விக்­கையில்,

கடந்த இரு­பதாம் திகதி இரவு வேளை பொலி­சாரால் இரு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இந்த கொலையை தமிழ் மக்கள் மீது கடந்­த­காலம் தொட்டு தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் கொலை­களில் தொடர்ச்­சி­யா­கவே பார்க்­கின்றோம். இலங்­கையில் மாறி மாறி­வரும் ஆட்­சி­யா­ளர்­களின் கீழ் தமிழ் மக்கள் படு­கொ­லை­களை எதிர்­நோக்­கிய வண்­ணமே இருக்கின்­றனர். அரச பயங்­க­ர­வாதம் தமி­ழர்­களை அடக்கி ஆள்­வ­தற்கு இவ்­வா­றன படு­கொ­லைகள் மூலம் தொடர்ந்து முயற்­சித்த வண்­ணமே உள்­ளது.

ஆயினும் இனி­மேலும் தமி­ழர்கள் மீதான படு­கொ­லை­களை அனு­ம­திக்க முடி­யாது என்­பதில் எமது மக்கள் உறு­தி­யாக உள்­ளனர். மக்­க­ளு­டைய ஒட்­டு­மொத்த வெளிப்­பா­டாக நாளைய தினம் இடம்­பெ­ற­வுள்ள ஹர்த்தால் இருக்கும் என நாம் நம்­பு­கின்றோம். இதற்கு பய­ணிகள் போக்­கு­வ­ரத்து பேரூந்து சங்­கங்கள், மற்றும் வணிகர் கழ­கங்கள், பொது அமைப்­புக்கள், சங்­கங்கள் என அனைத்தும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

இந்­நி­லையில் வர்த்­த­கர்கள் அனை­வரும் தமது கடை­களை நாளைய தினம் பூட்டி, ஹர்த்­தா­லுக்கு பூரண ஆத­ரவை தர­வேண்டும். இதே போன்று அரச பணி­யா­ளர்கள், வங்கி நிறு­வ­னங்கள் என சகல திணைக்­க­ளங்­களும் மாணவர் கொலையை கண்­டித்தும் அவர்­க­ளுக்கு நீதி கோரியும் இடம்­பெறும் ஹர்த்­தா­லுக்கு பூரண ஆத­ரவு வழங்க வேண்டும்.

தமி­ழர்கள் மீது ஒவ்­வொரு ஆட்­சி­யா­ளர்­களின் காலங்­களில் அரச பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இவை ஒவ்­வொன்றும் தமிழ் மக்­களின் உயிர்­களை பறித்த வண்­ணமே உள்­ளன.

ஆயுதம் தாங்­கிய பொலிசார் வீதி­களில் நின்று பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களை துப்­பாக்­கியால் சுடு­வது என்­பது சாத­ர­ணா­மாக கருத முடி­யாது. எனவே மாண­வர்கள் சுடப்­பட்­டத்தை கண்­டித்தும் அவர்­க­ளு­டைய கொலைக்கு நீதி கோரியும் நாளை இடம்­பெ­ற­வுள்ள ஹர்த்­தா­லுக்கு அனைத்து தரப்பும் பூரண ஆத­ரவு வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்­கின்றோம் என அவர் தெரி­வித்தார்.

இந்த கூட்­டத்தில், இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் நிர்­வாக செய­லாளர் எஸ்.குல­நா­யகம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்களான எஸ்.சிறி­தரன், ஈ.சர­வணபவன், வலி.வடக்கு பிர­தேச சபையின் முன்னாள் தவி­சாளர் எஸ்.சுகிர்தன், ரெலோவின் செய­லாளர் நாயகம் சிரேஸ்ட சட்­டத்­த­ரணி என்.ஸ்ரீகாந்தா, உப­த­லைவர் ஹென்றி மஹேந்­திரன், நிதி செய­லாளர் கே.என்.விந்தன் கன­க­ரத்­தினம், தேசிய அமைப்­பாளர் எம்.கே.சிவா­ஜிங்கம், யாழ்.மாவட்ட அமைப்­பாளர் சில்­வேஸ்ரர், புளொட் அமைப்பின் செயலாளர் நாயகம் சதானந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, தலைவர் சுகு சிறிதரன், உறுப்பினர் எஸ்.மோகன், தமிழர் விடுதலைக்கூட்டணி நிர்வாகச்செயாளர் எஸ்.சங்கையா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு நீதிபதி விதித்த அதிர்ச்சி தீர்ப்பு…!!
Next post அமெரிக்காவில் டிராக்டர் மீது சுற்றுலா பஸ் மோதி 13 பேர் பலி…!!