மதுபானம் அருந்திவிட்டு பஸ்ஸை செலுத்திய சாரதி கைது…!!
Read Time:51 Second
மதுபானம் அருந்திவிட்டு பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் ஹட்டனிலிருந்து லக்கஷபான நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ் வண்டியை ஹட்டன் அளுத்கம பகுதியில் சோதனையிட்டபோதே சாரதி மது அருந்திவிட்டு பஸ்ஸை செலுத்தியமை தெரியவந்தது.
இதையடுத்து, பஸ் சாரதியை கைது செய்த பொலிஸார் பரிசோதனையின் பின் வழக்கு பதிவு செய்துள்ளதுடன் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Average Rating