விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட அழுகிய மீன்கள்- நுகர்வோருக்கு எச்சரிக்கை…!!
Read Time:1 Minute, 18 Second
மனித பாவனைக்கு பொருத்தமற்ற மீன் தொகையுடன் காணப்பட்ட கொள்கலன் ஒன்று ஒருகொடவத்தை சுங்கப்பிரிவினரால் இன்று(28) கைப்பற்றப்பட்டுள்ளது
இதன்போது குறித்த கொள்கலனில் இருந்து கலாவதியான ரூபாய் 14 லட்சம் பெறுமதியான மீன்தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கைப்பற்றப்பட்ட மீன் தொகையின் நிறை 18 ஆயிரத்து 480 கிலோ கிராம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
நோர்வேயில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இந்த மீன் தொகையை மட்டக்குளியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த மீன் தொகையானது கப்பலில் இருந்து இலங்கைக்கு தரையிறக்கும் போதே கெட்டுப்போய் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Average Rating