4 வயது சிறுவனின் மரணம்…. மனதை உறைய வைக்கும் நிகழ்வு…. இறப்பு இப்படியும் நிகழும்…!!
பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் வீட்டில் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. North Yorks, Scarborough பகுதியை சேர்ந்த 4 வயதான Maison Hirstle என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது Maison Hirstle வீட்டில் தனது 16 வயது சகோதரனுடன் குறும்புத்தனமாக விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த கோர்ட்டின் தொப்பி கதவின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் Maison Hirstle தலை கதவில் மோத அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதைக்கண்ட சகோதரன் தம்பியை தூக்கிக்கொண்டு தந்தையிடம் சென்றுள்ளார். உடனே தந்தை ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைக்க Maison Hirstle மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சிறுவனை சோதித்த மருத்துவர்கள், தலையில் காயம் பட்டதால் சிறுவனின் மூளை கடுமையாக பாதித்துள்ளது என கூறியுள்ளனர். பின்னர், சிறிது நேரம் கழித்து குடும்பத்திற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிறுவன் மரணமடைந்த செய்தி அக்குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Average Rating