காணாமல் போனதாக கூறி மறைந்திருந்த குடும்பஸ்தர் பொலிசாரால் கைது…!!
காணாமல் போனதாக கூறிய நிலையில் மறைந்திருந்த குடுமபஸ்தர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தெய்வேந்திரம் சிறிகாந்தன் (வயது 32) என்ற குடும்பஸ்தர் காணாமல் போனதாக அவரது மனைவியால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் குறித்த குடும்பஸ்தரை வவுனியா, கல்மடு பகுதியில் மோட்டர் சைக்கிளுடன் நின்ற நிலையில் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக போலியான முறைப்பாட்டை தனது மனைவியின் துணையுடன் பொலிசில் செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபருக்கு எதிராக வவுனியா நீதிமன்றில் பொலிசாரால் குறித்த சம்பவம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ம் திகதி நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
Average Rating